விருதுநகர் மாவட்டத்தில் - தேவர் சிலைக்கு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை :

விருதுநகர் மாவட்டத்தில் -  தேவர் சிலைக்கு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை :
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேவர் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.

ராஜாபாளையம் ஆண்டத்தம்மன் கோயில் தெருவில் உள்ள தேவர் சிலைக்கு தென்காசி எம்.பி தனுஷ்குமார், தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர் ‘தெய்வம் தந்த தேச பக்தர்’ என்ற நூல் வெளியிட்டு விழா நடை பெற்றது. திமுக நகர நிர்வாகிகள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சேத்தூரில் தேவர் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் லிங்கம் தலைமையில் மாலை அணிவித்தனர். இந் திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் வீராச்சாமி, நகரச் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராஜபாளையத்தில்  மாப் பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத் தலைவர் ராமராஜ் மற்றும் நிர்வாகிகள், தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதேபோன்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in