Published : 31 Oct 2021 03:10 AM
Last Updated : 31 Oct 2021 03:10 AM

தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளில் 8 மணி முதல் பொருட்கள் விநியோகம் :

தீபாவளி பண்டிக்கைக்காக நவ.1 முதல் 3-ம் தேதி வரை ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணிவரை பொருட்கள் பெறலாம், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 5,48,051 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் நாளை முதல் முதல் நவ. 3-ம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். அனைவரும் 3-ம் தேதிக்குள் பொருட்களை பெற வேண்டும் என்பது கட்டாயமில்லை.

தீபாவளிக்கு முன்னதாக பொருட்களை வாங்காதவர்கள் வழக்கம் போல, பண்டிகை விடுமுறை முடிந்த பிறகு 8-ம் தேதி முதல் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யாராவது ஒருவர் மட்டும், கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும். நாளை முதல் 3-ம் தேதி வரை அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் 04286-281116 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x