மின் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் :

மின் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம்  :
Updated on
1 min read

பாளையங்கோட்டை மகா ராஜநகரில் மின்நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் கரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சிட்டிசன் கன்ஸ்யூமர், சிவிக் ஆக்சன் குரூப் மற்றும் திருநெல்வேலி மின் நுகர்வோர் மையம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எம்.சி.முத்தையாபிள்ளை மகளிர் விடுதி மேலாளர் கோமதி வரவேற்றார். திருநெல்வேலி மின் வாரிய உதவி செயற் பொறியாளர் ( பாதுகாப்பு) இ. பேச்சிமுத்து, மின் பாதுகாப்பு, மின்தடை புகார் தெரிவிப்பது, பருவ மழைக் காலங்களில் கடைபிடிக்க வேண் டிய நெறிமுறைகள் குறித்து விளக் கினார். மின் நுகர்வோர் மைய ஆலோசகர் எஸ். சண்முகம், முதுநிலை ஆலோசகர் ஜி. முருகமுரளிதரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கரோனா விழிப்புணர்வு குறித்து பெட்காட் மாவட்ட செயலாளர் கோ. கணபதி சுப்பிரமணியன் விளக்க உரையாற்றினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in