Published : 31 Oct 2021 03:12 AM
Last Updated : 31 Oct 2021 03:12 AM

தி.மலை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் :

தி.மலை மாவட்ட ஊராட்சி குழுக் கூட்டம், தி.மலை அடுத்த வேங்கிக்காலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பார்வதி சீனுவாசன் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலாளர் அறவாழிமுன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ண மூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில், “15-வது நிதிக்குழு மூலம் ரூ.6.58 கோடியில் பணிகள் தேர்வு செய்தல், இல்லம் தேடி மருத்துவத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்ட ஊராட்சி குழு உறுப் பினர்கள் ஆறுமுகம், சரவணன், அரவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x