விழுப்புரத்தில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் -  134 பேருக்கு பணி நியமன ஆணை :

விழுப்புரத்தில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் - 134 பேருக்கு பணி நியமன ஆணை :

Published on

விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேற்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

வேலை வாய்ப்பு முகாமில் 21 தனியார் துறை நிறுவனங்கள் 687 பணிக்காலியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்திடும் வகையில் பங்கேற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் உட்பட 134 பேர் தேர்வு செய்யப்பட்டு உடனே பணி நியமன ஆணை வழங்கப்பட்டது மேலும் 59 பேர் முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று, இரண்டாம் கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 14 பேர் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் நடத்தப்பெறும் திறன் பயிற்சிக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.முன்னதாக இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வேல்முருகன் வரவேற்புரை வழங்கி, முகாம் குறித்து திட்ட விளக்கவுரை வழங்கினார். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கல் லாவண்யா, மனோகரன் அவர்கள் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். உதவியாளர் ரஞ்சித் நன்றி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in