பேருந்து வசதி கேட்டு அதிமுக மனு :

பேருந்து வசதி கேட்டு அதிமுக மனு :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவுவை அதிமுகவினர் சந்தித்து தங்கள் பகுதிக்கு அரசு பேருந்து வசதி ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

ராதாபுரத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான மதன் தலைமையில் , கிளைச் செயலாளர்கள் ராஜ்குமார், ஊசிக்காட்டான் உள்ளிட்டோர் சட்டப் பேரவை தலைவரை சந்தித்து அளித்த மனுவில், “வள்ளியூரிலிருந்து தினமும் கூத்தங்குழி வரை செல்லும் அரசு பேருந்தை சுப்பிரமணிய தேரி

வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in