

திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்துக்கு உட்பட்ட 49-வது வார்டு பாலாஜி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாநகராட்சி தூய்மைப் பணிகளை, மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டார்.
அப்பகுதியில் தனியார் நிறுவனங்கள் மூலம் கொட்டப்படும் குப்பை, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குப்பை தொடர்பாக சுகாதார ஊழியர்களிடம் அவர் விசாரணை மேற்கொண்டார்.
இதையடுத்து அப்பகுதியில் இரண்டு தனியார் பின்னலாடை நிறுவனங்கள் குப்பையை முறையாக வெளியேற்றாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தொடர்புடைய நிறுவனங்களுக்கு தலா ரூ. 5,000 வீதம், ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
நிறுவனங்களுக்கு எச்சரிக்கை