பட்டா மாறுதல் சிறப்பு முகாம் :

பட்டா மாறுதல் சிறப்பு முகாம் :
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட் டத்தில் பட்டா மாறுதல், திருத்தங்கள் மேற் கொள்வதற்கான சிறப்பு முகாம் இன்று தொடங்கி வரும் ஜனவரி மாதம் வரை நடைபெற உள்ளது என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்..

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டா மாறுதல், பிழை திருத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைத்து வருவாய் கிராமங்கள், நகரங்களில் இன்று (அக்.29) முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி வரை ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்கள் தலைமையில் நடைபெறும் முகாமில் புல எண், உட்பிரிவு, பரப்பு, பெயர், உறவுமுறை திருத்தங்கள் உள்ளிட்டவற்றை செய்து கொள்ள விண்ணப் பிக்கலாம். இந்த முகாம் களை பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in