நாமக்கல்லில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

நாமக்கல்லில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் :
Updated on
1 min read

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (29-ம் தேதி) விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது,

இதுதொடர்பாக நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயோ சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாளை காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் சமூக விலகலை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும், கைகளை நன்கு சுத்தம் செய்தும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in