Published : 28 Oct 2021 03:08 AM
Last Updated : 28 Oct 2021 03:08 AM

தேனி ஐம்பொன் சிலைகள் 24 மணி நேரத்தில் மீட்பு :

தேனி அரண்மனைப்புதூர் அருகே உள்ளது வேதபுரி. இங்குள்ள தட்சிணா மூர்த்தி கோயிலில் கடந்த 26 அதிகாலையில் 9 ஐம்பொன் சிலைகள் திருடு போயின.

ஆசிரம மேலாளர் சுரேஷ் அளித்த புகாரின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீ ஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் பால்சுந்தர், முத்துக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக் கப்பட்டன.

தனிப்படையினரின் விசாரணையில் தேனி மாவட்டம், பெரியகுளம் மில்லர் சாலையைச் சேர்ந்த தர் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரைக் கைது செய்து விசாரித்ததில் பெரியகுளத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் சேர்ந்து சிலைகளை திருடி யது தெரிந்தது.

24 மணி நேரத்தில் 9 சிலைகளும் மீட்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x