Published : 27 Oct 2021 03:09 AM
Last Updated : 27 Oct 2021 03:09 AM

கேரளாவுக்கு கடத்த முயன்ற 16 கிலோ கஞ்சா பறிமுதல் :

சேலம் ஜங்ஷன் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்துவதாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சேலம் வழியாக செல்லும் ரயில்களில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் ரயிலில் முன்பதிவு பெட்டியில் இருந்த டிராவல் பேக்கில் 16 கிலோ 500 கிராம் கஞ்சா பண்டல்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், கஞ்சாவை யார் கொண்டு வந்தார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போதை கடத்தல் தடுப்புப் பிரிவில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் ஒப்படைத்தனர். மேலும், கஞ்சாவை கடத்தி வந்தவரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x