நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் :

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்  :
Updated on
1 min read

திருநெல்வேலி, வண்ணார்பேட்டையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். பகத்சிங் தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அரசு மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட துணைத் தலைவர் பாலன், துணைச் செயலாளர் நவராஜ் மோசஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் முத்துக்கிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் பாலன் ஆகியோர் பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலார் காசிவிஸ்வநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in