நெல்லையில் அக்.  29-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்    :

நெல்லையில் அக். 29-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

Published on

திருநெல்வேலி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 29-ம் தேதி காலை 11 மணியளவில் ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அடங்கத்தில் நடைபெறுகிறது.

ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர்.

மேலும், நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆன்லைன் பதிவேற்றம் நடைபெற உள்ளதால் விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in