Published : 25 Oct 2021 03:09 AM
Last Updated : 25 Oct 2021 03:09 AM

புவனகிரி பகுதியில் 30 வாகனங்களில் பேட்டரி திருட்டு :

புவனகிரி பகுதியில் புவனகிரி, பெருமாத்தூர், ஆதிவராகநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக டிராக்டர், ஜேசிபி, லாரி, கார் ஆகியவற்றில் உள்ள பேட்டரிகள் திருடப்பட்டு வருகிறது. வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை இரவில் வீட்டிற்கு முன் நிறுத்தி விட்டு மறுநாள் காலையில் பார்க்கும் போது வாகனங்களில் இருந்த பேட்டரிகள் திருடப்பட்டு இருக்கிறது. இதுவரை சுமார் 30-க்கும் மேற்பட்ட பல்வேறு வாகனங்களில் இருந்து பேட்டரிகள் திருடப்பட்டு உள்ளன. எந்த வாகனத்தில் பேட்டரி திருடுபோகுமோ என தினமும் அச்சத்தில் அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் உள்ளனர். இதுவரை திருடு போன வாகன பேட்டரிகளின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆட்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டாலும் வாகனத்தில் உள்ள பேட்டரியை மர்மநபர்கள் சாமர்த்தியமாக திருடிச் செல்கின்றனர் என்று கூறுகின்றனர் வாகன உரிமையாளர்கள். வாகனங்களில் பேட்டரி திருட்டை தடுக்க போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x