திருவெண்ணெய்நல்லூரில் பைக் திருடிய சகோதரர்கள் :

பைக் திருடியதாக திருவெண் ணெய்நல்லூர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சகோதரர்கள்.
பைக் திருடியதாக திருவெண் ணெய்நல்லூர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சகோதரர்கள்.
Updated on
1 min read

திருவெண்ணெய்நல்லூரில் பைக் திருடிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் இரு பைக்குகள் திருடு போனதாக திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இதனிடையே திருவெண் ணெய்நல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசன் மற்றும் காவலர்கள் பைத்தாம் பாடி கூட்ரோடு அருகே வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியாக பைக்கில் வந்த நபர்களை சந்தேகத்தின் பேரில் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள், வானூர் வட்டம் ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (27) மற்றும் வெற்றிவேல் (23) என்பதும், இருவரும் சகோதரர்கள் என்பதும் பைக் திருட்டில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in