Published : 24 Oct 2021 03:07 AM
Last Updated : 24 Oct 2021 03:07 AM

கொல்லிமலை அடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம் :

: கொல்லிமலை அடிவாரப் பகுதியில் உலவும் சிறுத்தையை கண்காணிக்க மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில் தலா 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் சிறுத்தை நடமாட்டதை கண்காணித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இரவு வேளையில் வரும் சிறுத்தை ஆடு உள்ளிட்டவற்றை அடித்து இழுத்துச் செல்கிறது. இதனால், இரவு மற்றும் அதிகாலை வேளையில் கொல்லிமலை அடிவார கிராம மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேவர அச்சம் அடைந்துள்ளனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவின் பேரில் வனத்துறையைச் சேர்ந்த தலா 8 பேர் கொண்ட 3 குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் கொல்லிமலை அடிவாரப் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x