திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது :

திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது :
Updated on
1 min read

திருச்சி பாலக்கரை கல்லுக்காரத் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பார்த்திபன்(24). நேற்று முன்தினம் பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 3 பேர் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.50 ஆயிரத்தைப் பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து பார்த்திபன் அளித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதனடிப்படையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக முதலியார் சத்திரம் ஆலம் தெருவைச் சேர்ந்த தர்மராஜ்(27), முருகானந்தம்(28), சுனில்(19) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.44 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in