Published : 24 Oct 2021 03:09 AM
Last Updated : 24 Oct 2021 03:09 AM

காவல்துறையினருக்கு பணியிட மாறுதல் கவுன்சலிங் :

தென்காசி மாவட்டத்தில் பணியாற்றி வரும் காவல்துறை யினருக்கு பணியிட மாறுதல் வழங்குவதற்கான கவுன்சலிங் மாவட்ட காவல் கண் காணிப் பாளர் அலுவலகத்தில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு, எஸ்பி கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். இதில் ஏராளமான காவல் துறையினர் கலந்து கொண்டு, தங்களது குடும்பச் சூழ்நிலை, உடல்நிலை போன்ற காரணங்களால் இடமாறுதல் அளிக்க வேண்டி விண்ணப்பித்தனர். அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடிவடிக்கை எடுத்து, விரும்பிய காவல் நிலையங்களுக்கு பணியிட மாறுதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x