Published : 23 Oct 2021 03:07 AM
Last Updated : 23 Oct 2021 03:07 AM

‘தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசு’ :

உதகை

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘நீலகிரி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட கரோனா தொற்று பரவல் தடுப்புநடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளால் கரோனா பரவலின் தாக்கம் குறைந்துள்ளது. இன்று (அக்.23) மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில், 18 வயதுடைய அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். 17 வயது முடிந்து 18 வயது தொடங்கவுள்ள நபர்கள்,பிறப்புச் சான்றிதழ், பள்ளிக்கல்வி சான்றிதழ் ஏதாவது ஒன்றை காண்பித்து, தடுப்பூசி செலுத்திகொள்ளலாம். இவர்களில் மூன்று நபர்களுக்கு குலுக்கல் முறையில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x