படித்த, வேலைவாய்ப்பு இல்லாத - இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு :

படித்த, வேலைவாய்ப்பு இல்லாத  -  இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு  :
Updated on
1 min read

படித்த, வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் அழைப்பு விடுத்துள்ளார்.

படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பதிவு மேற்கொண்டவர்கள், அதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஐந்தாண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரர்களும், ஒரு வருடம் முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று பதிவு மேற் கொள்ளலாம், என மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in