Published : 23 Oct 2021 03:09 AM
Last Updated : 23 Oct 2021 03:09 AM

திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் - இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் :

திருப்பத்தூர்/தி.மலை

திருப்பத்தூர், தி.மலை மாவட்டங் களில் இன்று கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்கள் நலனுக்காக சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. ஏற்கெனவே, 5 முறை மெகா தடுப்பூசி முகாம் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகள், 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 313 நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் அக்டோபர் 23-ம் தேதி (இன்று) நடைபெறவுள்ள கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் குறித்து அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் பேசும்போது, “தி.மலை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமுக்காக 215 பொறுப்பு அலுவலர்கள், 32 கண்காணிப் பாளர்கள், 5 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

6-வது வாரமாக, அக்டோபர் 23-ம் தேதி (இன்று) 1,075 முகாம்கள் மூலமாக 1.61 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு, அரசு மற்றும் தனியார் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரை யாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x