Published : 22 Oct 2021 03:06 AM
Last Updated : 22 Oct 2021 03:06 AM

தி.கோட்டில் தன்வந்திரி, கருடாழ்வார் உற்ஸவர் சிலைக்கு சிறப்பு பூஜை :

திருச்செங்கோடு செல்வ விநாயகர் கோயிலில் தன்வந்திரி, கருடாழ்வார் உற்ஸவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் தன்வந்திரி தியான பீடம் அமைந்துள்ளது. இங்கு கருடாழ்வாருக்கு 16.8 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட உள்ளது. இதன் உற்ஸவர் சிலை 6 மாநிலங்கள், 600 வீடுகள் உள்பட பல்வேறு இடங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு பூஜைகள் செய்து பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் திருச்செங்கோடு செல்வ விநாயகர் கோயிலில் தன்வந்திரி, கருடாழ்வார் உற்ஸவர் சிலைகள் வைக்கப்பட்டன. இச்சிலைக்கு பக்தர்கள் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

இதுகுறித்து தன்வந்திரி தியான பீட நிர்வாகிகள் கூறுகையில், கரோனா போன்ற பல்வேறு நோய்களிலிருந்து மக்களை காக்கும் வகையில் தன்வந்திரி மற்றும் கருடாழ்வார் சிலையை கொண்டு சென்று பொதுமக்கள் பிரார்த்தனைக்காக வைத்து வருகிறோம். கருடாழ்வார் சிலையை வணங்கிச் சென்றால் நோய்கள் அணுகாது என்பது ஐதீகம், என்றனர். திருச்செங்கோடு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x