கட்டுமான பணியின்போது தொழிலாளி மரணம் :

கட்டுமான பணியின்போது தொழிலாளி மரணம் :
Updated on
1 min read

தேனி மாவட்டம், பூமலைக்குண்டு கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சரவணன்(45). கட்டிடத் தொழிலாளி. பூமலைக்குண்டு நடுத்தெருவில் வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

மாடிப்படியில் இருந்து பிளாஸ்டிக் டிரம்மை தூக்கி வந்தவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.

வீரபாண்டி காவல் சார்பு ஆய்வாளர் வரதராஜன் வழக் குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in