குடுமியான்மலை ஆசிரியை சஸ்பெண்ட் :

குடுமியான்மலை ஆசிரியை சஸ்பெண்ட் :
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அரசு பள்ளி ஆசிரியை ஆ.கலைமகள். இவர், குடுமியான்மலையில் தனியார் பெண் குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தார். இவரது கணவர் ராஜேந்திரன்.

காப்பக குழந்தைகளை, சொந்த வேலைக்கு பயன்படுத்திய புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் அண்மையில் காப்பகத்தை மூடி சீல் வைத்தனர். மேலும், 2 பேர் மீதும் அன்னவாசல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஆசிரியை கலைமகளை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி நேற்று உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in