Published : 21 Oct 2021 03:08 AM
Last Updated : 21 Oct 2021 03:08 AM

‘இ-சேவை மையங்களில் ஜாதிச்சான்று பெறலாம்’ :

திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங் குடியினர் ஜாதிச் சான்று கோருபவர்கள் அரசு இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மாவட்டத்தில் இதுவரை கையேடு வழியாக வழங்கப்பட்டு வந்த பழங்குடியினர் (எஸ்.டி) ஜாதிச்சான்று இனி அரசு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் பழங்குடியினர் ஜாதிச் சான்று கோரும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள உரிய ஆதார ஆவணங்களான ஆதார் அட்டை, குடும்ப அட்டை, கல்வி மாற்றுச் சான்றிதழ், தாய்/தந்தை ஜாதிச்சான்று அல்லது உறவினர் ஜாதிச்சான்று ஆகியவற்றுடன் அரசு இ-சேவை மையங்களில் ரூ.60 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x