Published : 18 Oct 2021 03:11 AM
Last Updated : 18 Oct 2021 03:11 AM

கள்ளக்குறிச்சியில் புகைப்பிடித்த 10 பேருக்கு அபராதம் :

கள்ளக்குறிச்சியில் பொது இடங் களில் புகை பிடித்த 10 பேருக்கு சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்தனர்.

கள்ளக்குறிச்சியில் பொது இடங்களில் புகைப்பிடித்துக் கொண்டு மற்றவர்களுக்கு இடை யூறு ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சுகாதாரத் துறை துணை இயக் குநர் பூங்கொடி உத்தரவின் பேரில்மேலூர் வட்டார மருத்துவ அலு வலர் பாலதண்டாயுதபாணி தலைமையிலான சுகாதார அலுவலர்கள் சுந்தர்பாபு, கொளஞ்சி யப்பன் மற்றும் மகாலிங்கம் ஆகி யோர் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது கள்ளக்குறிச்சி பேருந்து நிலை யம் மற்றும் நான்குமுனை சந்திப்புபகுதிகளில் புகை பிடித்ததாக கண்டறியப்பட்ட 10 பேருக்குமொத்தம் ரூ.1,000 அபராதம் விதிக் கப்பட்டது.மேலும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x