Published : 18 Oct 2021 03:11 AM
Last Updated : 18 Oct 2021 03:11 AM

சிதம்பரம் அருகே ரவுடி கைது :

சிதம்பரம் அருகே வல்லம் படுகையில் ரவுடியை போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் நேற்று அண்ணா மலைநகர் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வல்லம் படுகை பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து பேசிக் கொண்டிருந்தார். இது குறித்து பொதுமக்கள் ரோந்து போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீஸார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த ரவுடி பாடலீஸ்வரன் (42) என்பது தெரிய வந்தது. இதையடுத்து பாடலீஸ்வரனை போலீஸார் கைது செய்து சிறை யில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x