Published : 17 Oct 2021 03:09 AM
Last Updated : 17 Oct 2021 03:09 AM

சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு :

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்ஞினி கிரா மத்தைச் சேர்ந்தவர் பழனியம் மாள்(55). கணவரை இழந்த இவர், மகனுடன் வசித்து வருகி றார். இவரது மகன் விறகு கரி மூட்டம் போடும் தொழில் செய்து வருகிறார். வெளியூரில் தங்கி தொழில் செய்து வரும் இவர்கள் ஆயுதபூஜையையொட்டி சொந்த ஊருக்கு வந்துள்ளனர். நேற்று காலை பயன்பாடு இல்லாத தனது வீட்டின் அருகே அமர்ந்திருந்தபோது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில், இடிபாடுகளில் சிக்கி பழனியம்மாள் அந்த இடத்தி லேயே உயிரிழந்தார்.

புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த இரும்புலிக் குறிச்சி போலீஸார், பழனியம் மாள் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்து வமனைக்கு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x