வேலூர் சிறையில் நளினி-முருகன் சந்திப்பு :

வேலூர் சிறையில் நளினி-முருகன் சந்திப்பு :
Updated on
1 min read

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் தண்டனை பெற்றுள்ள இவரது கணவர் முருகன் என்ற ்கரன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சனிக்கிழமை தினத்தில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் நளினி-முருகன் சந்திப்புக்கு நேற்று காலை ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, ஆண்கள் மத்திய சிறையில் இருந்து முருகனை, வேலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையிலான காவலர்கள் பலத்த பாதுகாப்புடன் பெண்கள் தனிச் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

காலை 9 மணி முதல் 9.30 மணி வரை இருவரின் நேர்காணல் நடைபெற்றது. பின்னர், முருகனை பாதுகாப்புடன் ஆண் கள் மத்திய சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in