சுதந்திர போராட்ட வீராங்கனை - குயிலி நினைவிடத்தில் மரியாதை :

சுதந்திர போராட்ட வீராங்கனை -  குயிலி நினைவிடத்தில் மரியாதை :
Updated on
1 min read

சிவகங்கையில் நேற்று விடுதலை போராட்ட வீராங்கனை குயிலியின் நினைவு தினத்தையொட்டி வேலுநாச்சியார் நினைவு மண்டப வளாகத்தில் உள்ள குயிலி நினைவுத்தூணில் வாரிசுகள், சமுதாயத் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிவகங்கை சமஸ்தானம் மகேஸ்துரை, செந்தில்நாதன் எம்எல்ஏ, பாஜக மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி, நகரத் தலைவர் தனசேகரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் பழனிச்சாமி, ஸ்டீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக வேலுநாச்சியார் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in