Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM

போதிய பேருந்து வசதி இல்லாததால் - மானாமதுரை அருகே மேற்கூரையில் பயணிக்கும் மாணவர்கள் :

மானாமதுரை அருகே போதிய பேருந்து வசதி இல்லாததால், பேருந்துகளின் மேற்கூரையில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணிக்கின்றனர்.

மானாமதுரை அருகே மூங்கில் ஊருணி, கோட்டைமேடு, சந்தனுார் சாலை, எஸ்.காரைக்குடி, நல்லாண்டிபுரம், ஆலம்பச்சேரி, மேலநெட்டூர், கீழநெட்டூர், கோச்சடை, தெ.புதுக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மானாமதுரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

பள்ளி முடிந்ததும் மாலை நேரங்களில் மானாமதுரையில் இருந்து அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய அரசு பேருந்துகள் இல்லை. இதனால் அவர்களிடம் பஸ் பாஸ் இருந்தும் தனியார் பேருந்தில் செல்லும் நிலை உள்ளது. அப்பேருந்தை விட்டால் சில மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் தனியார் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்தும், படிக்கட்டுகளில் தொங்கிய படியும் ஊர்களுக்கு செல்கின்றனர்.

ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணிப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாலை நேரத்தில் அவ்வழியாக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x