Published : 14 Oct 2021 05:57 AM
Last Updated : 14 Oct 2021 05:57 AM

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் :

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் தங்களுக்கு முறையாக பணி வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x