Published : 14 Oct 2021 05:58 AM
Last Updated : 14 Oct 2021 05:58 AM

குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது :

சாராய வியாபாரி குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (34). இவர், பேரணாம்பட்டு பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது பேரணாம்பட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரசாந்த் தொடர்ந்து சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதால் அவர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், ஆட்சியர் குமாரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.

ஆட்சியர் உத்தரவின் பேரில் பேரணாம்பட்டு காவல் துறையினர் பிரசாந்த் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பதிவு செய்யப்பட்டு அதற்கான உத்தரவு நகல் வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x