Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

தண்டவாள பராமரிப்பு பணியால் : வைகை, பல்லவன் ரயில்கள் பகுதியாக ரத்து :

ரயில் தண்டவாளத்தில் பராமரிப்புப் பணியால் (வண்டி எண் 02636) மதுரை - சென்னை எழும்பூர் வைகை சிறப்பு ரயில் , (வண்டி எண் 02605) சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில் அக்டோபர் 20, 27 புதன்கிழமைகளில் விழுப்புரம் - சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் ( வண்டி எண் 02635) சென்னை எழும்பூர் - மதுரை வைகை சிறப்பு ரயில், (வண்டி எண் 02606) காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் சிறப்பு ரயில் வழக்கம் போல் இயங்கும்.

(வண்டி எண் 02635) சென்னை எழும்பூர் - மதுரை வைகை சிறப்பு ரயில், (வண்டி எண் 02606) காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் சிறப்பு ரயில் நவம்பர் 10-ம் தேதி செங்கல்பட்டு - சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

இருப்பினும், நவம்பர் 10-ம் தேதியன்று (வண்டி எண் 02636) மதுரை - சென்னை எழும்பூர் வைகை சிறப்பு ரயில் மற்றும் (வண்டி எண் 02605) சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில் ஆகியவை வழக்கம்போல இயங்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x