Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM
ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் தபால் வாக்குப் பெட்டி யின் சாவி தொலைந்து போன தால் பூட்டை உடைத்து அதிகாரி கள் வாக்குகளை எண்ணினர்.
ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் பதிவான வாக்குப் பெட்டிகள் பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை 8 மணிக்கு தபால் வாக்கு களை எண்ணுவதற் காக பெட்டியின் சீல் அகற்றப்பட்டது. ஆனால் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பூட்டின் சாவியை அதிகாரிகள் தொலைத்துவிட்டனர். இதனால், பூட்டை உடைத்துப் பெட்டியைத் திறந்தனர். பின்னர் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டன.
பதிவான தபால் வாக்குகள் 77-ல் திமுக வேட்பாளர் கதிரவன் 61 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மாரி 9 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 5 வாக்குகளும் பெற்றனர். இரண்டு வாக்குகள் செல்லாதவை. தபால் வாக்குப்பெட்டியின் சாவி தொலைந்ததற்கு அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம் என வேட்பாளர்கள் குற்றம் சாட்டினர்.
ஆட்சியர் (பொ) ஆ.ம.காமாட்சி கணேசன் கூறும்போது, சம்பந்தப் பட்ட தேர்தல் அலுவலர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT