Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

40 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை :

ஈரோடு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்க (ஐ.என்.டி.யு.சி) செயற்குழுக் கூட்டம், ஈரோடு காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மண்டல துணை தலைவர் ரவி தலைமையில், மண்டல பொதுச் செயலாளர் அய்யப்பன், இணை தலைவர் பாபு, துணை பொதுச்செயலாளர் மக்புல், இணைச் செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மண்டல பொதுச் செயலாளர் துரைசாமி போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: போக்குவரத்துத்துறையில் பணியாற்றும் சேமநலப்பணியாளர்கள் உட்பட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் 40 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். 14-வது ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளி பண்டிகை முன்பணமாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும்.

நகர பேருந்துகளில் இலவசமாக பயணிகளை ஏற்றிச் செல்வதால், வருவாய் படியை உயர்த்தி வழங்க வேண்டும். போக்குவரத்துத்துறை பணியாளர்களின் நிலுவையில் உள்ள அனைத்து பணப்பலன்களையும், சீருடை, காலணி ஆகியவற்றையும் வழங்க வேண்டும் என்பதுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x