மருதையாற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை :

மருதையாற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை  :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆலத்தூர் வட்டம் கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொட்டரை நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.

தொடர்ச்சியாக மேலும் 2 நாட்கள் மழை பெய்தால் இந்நீர்தேக்கம் முழு கொள்ளளவை எட்டிவிடும். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொட்டரை அதன் அருகிலுள்ள கிராமங்களில் மருதையாற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கொட்டரை அதன் அருகிலுள்ள கிராமங்களில் மருதையாற்றின் கரையில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் செய்து வருவதாக மாவட்ட ஆட்சியர் ப. வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in