Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றிபெற்றவர்கள் விவரம் :

கோவில்பட்டி கோட்டத்தில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொல்லபரும்பு ஊராட்சி தலைவர் பதவிக்கு கௌரி, வாலசமுத்திரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு மகேஸ்வரி, புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெம்பூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு ராஜேஸ்வரி, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேடுலிபட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு வீரபெருமாள் வெற்றி பெற்றனர்.

கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புங்கவர்நத்தம் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வடிவேல் வெற்றி பெற்றார்.

தெற்கு வீரபாண்டியாபுரம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நீலாவதி, சாமிநத்தம் ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு செல்வராஜ், தருவைகுளம் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மிக்கேல் வினோ ரஞ்சித், மருதன்வாழ்வு 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு குருவம்மாள், கலப்பைபட்டி ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பரமேஸ்வரி, கொத்தாளி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பாலு வெற்றி பெற்றனர்.

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வைப்பார் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ராஜதுரை வெற்றி பெற்றார்.

கருங்குளம் ஒன்றியம் ஆழ்வார்கற்குளம் - வெ.மலைமேகலா, வைகுண்டம் ஒன்றியம் மூலக்கரை - ப.சாதிக் அலி ஆகியோர் ஊராட்சித் தலைவராக வெற்றிபெற்றனர். புதூர் ஒன்றியம் சின்னவநாயக்கன்பட்டி ஊராட்சித் தலைவராக பொ.எர்ரையா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x