Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

புதுவையில் புதிதாக 42 பேருக்கு கரோனா தொற்று :

புதுச்சேரி

புதுவையில் புதிதாக 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 2 பேர் உயிரிழந்தனர். புதுவையில் நேற்று 3,022 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதிதாக 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் தற்போது 639 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 59 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 2 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இறப்பு எண்ணிக்கை 1,848 ஆக உயர்ந்துள்ளது. புதுவை மாநிலத்தில் இதுவரை 10 லட்சத்து 53 ஆயிரத்து 18 பேர் தடுப்பூசி (2-வது தவணை உட்பட) போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x