Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM
சாத்தூரில் அடையாளம் தெரி யாத ஆண் சடலம், கழிவுநீர் ஓடையிலிருந்து மீட்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், சாத் தூர் மேலகாந்தி நகரில் உள்ள பொது சுகாதார வளாகத்தின் பின்புறம் கழிவுநீர் ஓடையில் துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது ஆண் சடலம் ஒன்று கிடந்தது. சாத்தூர் நகர் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். பின்னர், தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் கழிவுநீர் ஓடையிலிருந்து சடலம் மீட்கப் பட்டது.
இறந்து கிடந்தவருக்கு சுமார் 45 முதல் 50 வயது இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். அவர் யார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு கழிவுநீர் ஓடையில் வீசப்பட்டாரா? என்பது குறித்து சாத்தூர் நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT