Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM
கொடைக்கானல் மலை பேத்துப் பாறையை அடுத்துள்ள பாரதி அண்ணாநகர் பகுதியில் ஓராவி அருவி உள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து சுற்றுலா வந்த சிலர் நேற்று ஓராவி அருவிப் பகுதியில் குளித்துள்ளனர். மேல்மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் அருவியில் நீர் அதிகளவில் கொட்டுகிறது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணி அருண் (25) குளித்துக் கொண்டிருந்த போது மாயமானார். மற்றவர்கள் குளித்துவிட்டு கரையேறியபோது அருண் காணாமல் போனது தெரிய வந்தது. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அருணை தேடும் பணி நேற்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மீட்புப் பணியைப் பார்வையிட்டார். தீய ணைப்புத்துறையினர் தொடர்ந்து இளைஞரைத் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT