Published : 11 Oct 2021 03:14 AM
Last Updated : 11 Oct 2021 03:14 AM

பண்டிகை கால திருட்டுகளை தவிர்க்க உயர் கோபுரம் அமைத்து கண்காணிப்பு :

தீபாவளி பண்டிகை அடுத்தமாதம் 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குமாரபாளையத்தில் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் உள்ள இடங்களில் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இக்கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதைக் கண்காணிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், பள்ளிபாளையம் மற்றும் ஆனங்கூர் பிரிவு சாலை ஆகிய இடங்களில் காவல் துறையினர் உயர் கோபுரம் அமைத்துள்ளனர்.

இதில் கண்காணிப்பு கேமரா, மின் விளக்குகள், மைக் ஆகியன அமைக்கப்படவுள்ளன. இதில் இருந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். மேலும், கரோனா விதிமுறைகள் குறித்தும் மைக் மூலம் கடைகளுக்கு வரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், என காவல் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x