செஞ்சி அருகே விற்பட்டு கிராமத்தில் - தனி ஊராட்சி கேட்டு தேர்தல் புறக்கணிப்பு :

விற்பட்டு கிராமத்தில்  வீடுகளில் கருப்புக் கொடியேற்றிய  மக்கள்.
விற்பட்டு கிராமத்தில் வீடுகளில் கருப்புக் கொடியேற்றிய மக்கள்.
Updated on
1 min read

விற்பட்டு கிராம மக்கள் தனி ஊராட்சி கேட்டு கருப்புக்கொடியேற்றி தேர்தல் புறக்கணிப்பு செய்தனர்.

செஞ்சி அருகே அவியூர் கிராமத்தில் அதிக அளவில் வாக்குகள் உள்ளதால் அக்கிராம மக்களே தொடர்ந்து பொறுப்புகளுக்கு வருகின்றனர். இதனால் விற்பட்டு கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை.

தனி ஊராட்சி கேட்டு விற்பட்டு கிராம மக்கள் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக எவ்வித உத்திரவாதமும் அளிக்காததால்,நேற்று அக்கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்தனர். இதையடுத்து வருவாய்த் துறையினர் நடத்திய எவ்வித பேச்சுவார்த்தையும் பலனனிக்கவில்லை. இக்கிராமத்தில் சுமார் 550 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in