Published : 10 Oct 2021 03:18 AM
Last Updated : 10 Oct 2021 03:18 AM

வெல்டிங் வைக்கும்போது டேங்கர் லாரி வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு :

நாமக்கல் பொன்நகரில் டேங்கர் லாரி வெடித்ததில் பட்டறை உரிமையாளர் உயிரிழந்தார்.

நாமக்கல் பொன்நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி (38). அவர் அதே பகுதியில் டேங்கர் லாரி பட்டறை நடத்தி வந்தார். நேற்று மாலை பெட்ரோல், டீசல் நிரப்பும் டேங்கர் லாரி ஒன்றுக்கு வெல்டிங் வைக்கும் பணியில் பெரியசாமி ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென டேங்கர் லாரி வெடித்துள்ளது.

இதில், தூக்கி வீசப்பட்ட பெரியசாமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாமக்கல் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று டேங்கர் லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். நாமக்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x