Published : 09 Oct 2021 03:12 AM
Last Updated : 09 Oct 2021 03:12 AM

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 15,019 கனஅடியாக அதிகரிப்பு :

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து நேற்று விநாடிக்கு 15,019 கனஅடியாக அதிகரித்துள்ளது. .

கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் (7-ம் தேதி ) விநாடிக்கு 12,168 கனஅடியாக இருந்த நீர் வரத்து, நேற்று காலை 15,019 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை முதல் விநாடிக்கு 750 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 76.48 அடியாக இருந்த நிலையில், நேற்று காலை 77.67 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்தைக் காட்டிலும், நீர் திறப்பு குறைவாக உள்ளதால், அணை நீர் மட்டம் உயர தொடங்கியுள்ளது.நேற்று ஒரே நாளில் அணை நீர் மட்டம் 1.19 அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 39.67 டிஎம்சி-யாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x