10-ம் தேதி தடுப்பூசி முகாம் 1.25 லட்சம் பேருக்கு ஊசி போட இலக்கு :

10-ம் தேதி தடுப்பூசி முகாம்  1.25 லட்சம் பேருக்கு ஊசி போட இலக்கு  :
Updated on
1 min read

ஈரோட்டில் 10-ம் தேதி நடக்கும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 5-வது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் வரும் 10-ம் தேதி நடக்கவுள்ளது. முகாமில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முகாமில், 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஏற்கெனவே கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 84 நாட்கள் நிறைவடைந்திருந்தாலும், கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் 28 நாட்கள் நிறைவடைந்திருந்தலும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என ஈரோடு ஆட்சியர் எச். கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in