‘தடுப்பூசி தொடர்பாக அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை’ :

‘தடுப்பூசி தொடர்பாக அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை’ :
Updated on
1 min read

கரோனா தடுப்பூசி தொடர்பாகநீலகிரி மாவட்ட ஆட்சியர்ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் இந்தியமருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்தின் சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதால் எந்தவிதமான பக்க விளைவும் ஏற்படாது என்பதை மாவட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் மூலம்பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இது தொடா்பாக அவதூறு செய்தி பரப்புவோர் மீது மாவட்ட நிா்வாகத்தின் மூலம் கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in