Published : 07 Oct 2021 03:13 AM
Last Updated : 07 Oct 2021 03:13 AM

உள்ளாட்சித் தேர்தல் : தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்க உத்தரவு :

திருப்பூர்

திருப்பூர் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் எச்.ஏ.ரஹ்மான், வீ.புகழேந்திஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழக ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 9-ம்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும்அனைத்து வகையான தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு, தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994- பிரிவு 80 ஏ- ன் படிஅத்தொழிலாளர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் விடுப்பு வழங்கவேண்டும். அவ்வாறு ஊதியத்துடன் விடுப்பு வழங்க தவறும் தொழிற்சாலைகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x