மின்வாரிய பணியாளர்களுக்கு பயிற்சி :

மின்வாரிய பணியாளர்களுக்கு பயிற்சி :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி கோட்ட அளவிலான மின்வாரிய பணியாளர் களுக்கு பாதுகாப்பு வகுப்பு நடந்தது.கிருஷ்ணகிரி, கோட்டை பகுதியில் கிருஷ்ணகிரி கோட்ட அளவிலான மின்வாரிய பணியாளர்களுக்கு காலாண்டு பாதுகாப்பு வகுப்பு நடந்தது.

இதில் கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, சூளகிரி, காவேரிப் பட்டணம், ஆலப்பட்டி, எம்.சி.,பள்ளி உள்ளிட்ட கோட்டத்திற்குட்பட்ட அனைத்து மின் வாரிய அலுவலர் களும் பங்கு பெற்றனர்.

நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி தலைமை வகித்தார். செயற்பொறியாளர்கள் வேலு, செந்தில் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக வேலூர் மண்டல உதவி செயற்பொறியாளர் (பாதுகாப்பு) சங்கர் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் புதிதாக பணியில் சேர்ந்த கேங்மேன்களுக்கு பாதுகாப்பாக பணிபுரிவது குறித்த ஆலோசனையும், மழைக்காலங்களில் பாதுகாப்பு உபகரணங் கள் உபயோகிப்பது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

மேலும் நுகர்வோர்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், உதவி செயற்பொறிளர்கள் அம்பேத்கர், பனிமலர் மற்றும் உதவி பொறியாளர்கள், பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கிருஷ்ணகிரி நகர் உதவி செயற்பொறியாளர் கந்தசாமி நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in