Published : 07 Oct 2021 03:14 AM
Last Updated : 07 Oct 2021 03:14 AM

மரக்காணம் அருகே - அரசு விரைவு பேருந்து மரத்தில் மோதி 10 பேர் படுகாயம் :

மரக்காணம் அருகே அரசு விரைவு பேருந்து மரத்தில் மோதியதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னையில் இருந்து வேளாண்கண்ணிக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தமிழக அரசின் விரைவு பேருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றது. மரக்காணம் அருகே கீழ்பேட்டை அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த மரத்தின் மீது பேருந்து மோதியது. ஓட்டுநர் சரவணன் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இத்தகவல் அறிந்த மரக்காணம் போலீஸார் விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மரக்காணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x